தேங்காய் எண்ணெய் இருந்தும்
காலம் பூராவும் பரட்டைத் தலையாய்
தென்னை மரங்கள்.
அதனருகில் இருந்தும்
அடி மூக்கைக் காணமுடியா கண்கள்.
உள்ளூர்க் கோவில்களுக்குப்
போகக் கிடைக்கும் நேரம்
எப்போதுமே நாளைதான்.
நம்முள் இருப்பதாலேயே
அந்நியமான கடவுள்.
வயதான பெற்றோர்க்கு
மரணத்தின் பின்னரே
முழுப்பசி தீர்க்கும் பிண்டங்கள்.
அருமை தெரியாத எதுவும்
அருகாமையில் இருந்தும்
அகப்படாத தூரத்தில்.
//அருமை தெரியாத எதுவும்
அருகாமையில் இருந்தும்
அகப்படாத தூரத்தில்//
உண்மைதான்..